தமிழினப்படுகொலையாளி கோத்தபாயா ராஜபக்சாவின் ஸ்கொட்லாந்து வருகையை எதிர்த்து டென்மார்க்கிலுள்ள பிரித்தானியாதூதரகத்தின் முன்றலில் கவனயீர்ப்பு நிகழ்வு 29.10.21 ( வெள்ளிக்கிழமை] அன்று மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இவ் கவனயீர்ப்பு நிகழ்வானது மிகவும் குறுகிய காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட போதும் மக்கள் இணைந்து தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டி இருந்தார்கள். இவ் கவனயீர்ப்பு நிகழ்வின் போது பிரித்தானியா தூதுவரிடம் DSTF இனால் மகஜரும் கையளிக்கப்பட்டது.
தமிழினப் படுகொலையாளி கோத்தபாய ராஜபக்சா ஸ்கொட்லாந்து நாட்டில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள வருகிறார் , இந்த தமிழினப் படுகொலையாளியை சர்வதேச மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதற்காகவே இவ் கவனயீர்ப்பு போராட்டம் இன்று நடந்தது. இவ் கவனயீர்ப்பு நிகழ்வின் போது மக்கள் தமிழினப் படுகொலையின் ஆதாரப்படங்களை தாங்கி தங்களின் உணர்வினை வெளிப்படுத்தி இருந்தார்கள்.
நன்றி
டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்
DSTF